தொடர்புடைய செய்திகள்
- குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம்- டி.டி.வி.தினகரன்
- விநாயகர் சிலை உடைந்து விட்டதாக பரவும் தகவல் உண்மையில்லை- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
- சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் - எடப்பாடி பழனிசாமி
- இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
- ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபர் கைது
புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டியை அறிவித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்மக்குடி தாலுகாவில் உள்ள வாணக்கன்காடு என்ற ஊராட்சி பகுதியில், சமீபத்தில், பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில்,60 நிமிடத்தில் ஒரு நபர் பத்து பீர் குடிக்க வேண்டும் என்றும் சைடிஷ் ஆக மீன் வருவல் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு, நுழைவு கட்டணம் 1000 ரூபாய் எனவும், 36 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய இப்போட்டியில், முதல் பரிசு 5000 ரூபாய் என்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பீர் குடிக்கும் போட்டி பற்றி போஸ்டரை சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணேசமூர்த்தி என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
