1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man murder who released from jail by his lover

ஜாமினில் வெளிவந்த கள்ளக்காதலனை குத்தி கொலை செய்த காதலி.. 4 பேர் கைது..!

Murder
சிறையில் இருந்து ஜாமினில் வெளியான கள்ளக்காதலனை அவரது காதலி ஆட்களை வைத்து கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி அருகே பரணிகுமார் என்பவர் பல்வேறு வழக்குகளில் சிக்கிய நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைதுக்கு முன் அவருக்கும் ஜோதி என்ற 40 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் வழக்கு ஒன்றில் பரணிகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இதை அடுத்து அவருக்கு திருமணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து வந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் பரணிக்குமார் தன்னுடன் கணவன் மனைவி போல் வாழ்ந்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதா? என்று ஜோதி வாக்குவாதம் செய்ததாகவும் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் ஆட்களை கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து ஜோதி மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை: மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை..!