1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. koyambedu to avadi metro train plan

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம்.. திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

Metro Train
சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வ 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலம் போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.  
 
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Phase) மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Phase) ரயில்கள் இந்த இரண்டு அடுக்குகளில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரே தூணில் 4 மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில்  பிரமிக்க வைக்கும் டபுள் டெக்கர் பாலம் கட்டப்பட்டு வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் மயானங்கள் பராமரிப்பில் சிறப்பாக செயல்படும் ஈஷா! கோவையில் விருது வழங்கி பாராட்டிய ரோட்டரி சங்கம்!