தொடர்புடைய செய்திகள்
- ஆவடி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!
- கோயம்பேடு - கூடுவாஞ்சேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் மாநகர பேருந்துகள் எண் மாற்றம்..!
- சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்., ஜெயகுமாரின் அதிர்ச்சி பதிவு..!
- கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்..!
- ஆவடியில் பயங்கரம்.! விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!
கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம்.. திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வ
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலம் போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Phase) மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Phase) ரயில்கள் இந்த இரண்டு அடுக்குகளில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே தூணில் 4 மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் பிரமிக்க வைக்கும் டபுள் டெக்கர் பாலம் கட்டப்பட்டு வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Mahendran
