வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (13:58 IST)

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாலியல் தொழில்? குறி வைக்கப்படும் வெளியூர் பயணிகள்..!

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கும் வெளியூர் பயணிகளை குறிவைத்து பாலியல் தொல்லியல் செய்யும் அழகிகள் பணத்தை பிடுங்கி வழிப்பறிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே பாலியல் தொழில் நடந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில் காவல்துறையினர் அப்போது அங்குள்ள லாட்ஜ்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாடல் உடையில் அழகிகள் வெளியூர் பயணிகளை குறிவைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பதாகவும் அவ்வாறு சபலப்பட்டு செல்லும் நபர்களிடம் பணத்தை பிடுங்கி கொண்டு அடித்து விரட்டுவது விடுவதாகவும் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மாடல் உடையில் சுற்றி பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva