1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kerala rain red yellow and orange warning

கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளா
கேரளாவில் இன்றைய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாகவே கேரளாவின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதும் இது குறித்த எச்சரிக்கையை அவ்வப்போகுது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
 
அதேபொல் வயநாடு, இடுக்கி, பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை.. யார் யார் கலந்து கொண்டார்கள்?