தொடர்புடைய செய்திகள்
- இஸ்லாம் மதத்திற்கு மாறிய இளம்பெண் மீண்டும் இந்து மதத்தில்! நடந்தது என்ன?
- தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகின்றனர்: துஷ்யந்த் தவே அதிரடி வாதம்!
- ஜேசுதாசுக்காக திறக்கப்பட்ட பத்மநாபசுவாமி கோவில்
- மலையாள நடிகர் திலீபுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
- காதலியுடன் உல்லாசம் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன்
தமிழக எல்லையை ஆக்கிரமிக்கும் கேரளா? கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 100 மீட்டர் தூரத்தை கேரளா ஆக்கிரமிக்க முயற்சித்துள்ள நிலையில் தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லையாக இதுவரை ஆறுதான் இதுவரை எல்லையாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகேயுள்ள தாளூர் என்ற பகுதியை கேரளா ஆக்கிரமிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த பகுதியில் கேரள அதிகாரிகள் தமிழக பகுதியில் கோடு ஒன்றை போட்டு தங்கள் எல்லையாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தமிழர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த இடம் திடீரென கேரள மாநிலத்தின் கையில் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக வருவாய் அலுவலர்கள் இருப்பதாக இந்த பகுதியில் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இதுகுறித்து நல்ல தீர்வை ஏற்பட செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
