1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karur collector helps to built house

3 ஆண்டு ஆகியும் கட்டப்படாத வீடு - ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை என முதியவர் புகார். 

 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கம்பாடி மேல்பாக்கம் ஊராட்சியில் ஆரியூர் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவமுகாமை  மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்ட போது, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடு 3 வருடமாகியும் முடித்துத்தரப்படவில்லை அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முனியாண்டி என்ற முதியவர் கோரிக்கைவைத்தார் .
 
உடனடியாக முதிவரையும் அழைத்துக்கொண்டு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி இராமநாதபுரம் கிராமம் ஆதிதிராவிடர்காலனியில் உள்ள  அவரின் வீட்டிற்கே நேரில் சென்று பார்வையிட்டு 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர். வீட்டிற்கே வந்து பார்வையிட்டதில் நெகிழ்ந்துபோன முதியவர்.
About Writer
Sugapriya Prakash