1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (13:42 IST)

கட்சியின் அனைத்து அதிகாரங்களும் நம்மவர் கையில்..! – பொதுக்குழுவில் முடிவு!

தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கு பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் இன்று தனது பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வேட்பாளர்களை நியமிப்பது. கூட்டணி உள்ளிட்ட அனைத்திலும் கமல்ஹாசன் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூட்டம் வழங்கியுள்ளது.