1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal Hassan said about Mamthaji's protest

தமிழகத்திலும் இந்த தர்ணா நடந்திருக்க வேண்டும்: கமல்ஹாசன்

மம்தா பானர்ஜி
கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதிலும் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து கொல்கத்தாவில் ஒரு பிரமாண்டமான பேரணியை மேற்குவங்க முதல்வர் நடத்தி காட்டினார். இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று மேற்குவங்க காவ்ல்துறை ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி முதல்வர் மம்தா பானர்ஜியே சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை என்றும் சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர், தலைமைச்செயலாளர் உள்பட பலருடைய இல்லங்களில் மத்திய அரசின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடந்தபோது தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
திருநாவுக்கரசருக்கு வேறு பணி: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி