தொடர்புடைய செய்திகள்
- எந்த மத நூலிலும் பாகுபாடு இல்ல.. ஆ.ராசா பேசியது ஓவர்! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!
- ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்
- ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு: பாஜக பிரமுகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
- ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் மாற்றம் வரும்: அன்புமணி ராமதாஸ்
- பாத யாத்திரையை நிறுத்திவிட்டு திடீரென டெல்லி செல்லும் ராகுல் காந்தி: என்ன காரணம்?
பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி
பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல என்றும் மனுநீதியே என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பாக பாஜக, ஆ ராசா மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆ ராசா மீது விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை பிறபடுத்தப்பட்ட, தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை இழிவுபடுத்துவது. அடிமைகளாக கட்டமைப்பது. சுயமரியாதையும்,கண்ணியமும் மிகுந்த எந்த சமூகமும் மனுநீதியை ஏற்கமுடியாது. மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள்.
