தொடர்புடைய செய்திகள்
- ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி: நேற்று நீக்கம், இன்று மீண்டும் கட்சியில் சேர்ப்பு..
- தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் பாதிப்பு- டிடிவி தினகரன்
- அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: செங்கோட்டையன்
- 2026-ஆம் ஆண்டு இந்தியா, இந்து நாடாக அறிவிக்கப்படும் - பாஜக எம்.எல்.ஏ
- அதிமுக தலைமையை விமர்சனம் செய்ய கூடாது: பாஜகவினர்களுக்கு ஜேபி நட்டா கண்டிப்பு..!
அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்: பாஜகவுக்கு ஜெயகுமார் எச்சரிக்கை..!
அதிமுகவை சீண்டினால் எதிர் வினை பயங்கரமாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகியை நேற்று சஸ்பெண்ட் செய்த பாஜக இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது. இது அதிமுக மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.ல்
இந்த நிலையில் இது குறித்து ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும் அதிமுகவின் சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் இந்த எச்சரிக்கைக்கு பாஜக தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva
