1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar says about sasikala

சசிகலா சிரிக்காமல் நிறைய ஜோக் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

Jayakumar
ஜெயலலிதாவாக என்னை மக்கள் பார்க்கிறார்கள் என்று சசிகலா கூறியதற்கு சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்லுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று மக்கள் மத்தியில் சசிகலா பேசிய போது மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அதிமுகவே ஒற்றுமைப்படுத்துவதே தனது வேலை என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா இருந்த அதிமுக போல் மீண்டும் கட்சி ஒன்றிணையும் என்றும் கூறியிருந்தார்
 
மேலும் மக்கள் என்னை ஜெயலலிதாவாக பார்க்கிறார்கள் என்றும் அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பேச்சு குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘ஜெயலலிதாவாக என்னைப் பார்க்கிறார்கள் என கூறி சசிகலா சிரிக்காமல் ஜோக் சொல்கிறார் என்று கூறியுள்ளார்
 
மேலும் ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு அதிமுகவில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 6,442 பேர் பாதிப்பு; 34 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!