1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jayakumar get bail for third case

3 வது வழக்கிலும் கிடைத்தது ஜாமின்: விடுதலை ஆகிறார் ஜெயகுமார்

ஜெயகுமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் இரண்டு வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் தற்போது மூன்றாம் வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, அனுமதியின்றி போராட்டம் செய்த வழக்கு மற்றும் நிலமோசடி வழக்கு ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 
 
இதில் ஏற்கனவே இரண்டு வழக்குகளுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது நில மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து மூன்று வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் அவர் சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 
 
About Writer
Mahendran