திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியாவின் ஏஐ2455 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றிருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதை தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த கடுமையான கருத்தை வெளியிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.