1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. high court order to finish the vijayabaskar case

குட்கா வழக்கு!. 12 வாரம்தான் டைம்!.. விஜய பாஸ்கருக்கு நீதிமன்றம் நெருக்கடி..

vijaya baskar
சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் அமைச்சராக இருந்தபோது அவர் மீது 200 கோடிக்கு மேல் வருமானத்தை மறைத்தது மற்றும் குட்கா போதைப்பொருளுக்கு அனுமதி கொடுக்க லஞ்சம் வாங்கியது என சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது அவர் தவெகவில் இணைந்திருக்கிறார்..

இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது. எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

தடையை மீது குட்கா விற்க அனுமதி அளித்த புகாரில் சி.விஜயபாஸ்கர். பி.வி ரமணா உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு அவருக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சியை கவிழ்த்தே தீருவோம்.. சீனியர் திமுக பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா ஜூனியர் டீம்?