தொடர்புடைய செய்திகள்
- புதுவையில் இனி தமிழ்நாடு பாடத்திட்டம் இல்லை: அமைச்சர் நமச்சிவாயம்..!
- இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!
- 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்து நுரை தள்ளி இறந்த சிறுமி! - திருவண்ணாமலையில் அதிர்ச்சி!
- அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்த்தப்படுகிறதா? - தமிழக அரசு அளித்த விளக்கம்!
- 9 மாவட்டங்களில் காத்திருக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 20 செமீ வரை மழை பெய்யும்.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக இன்று கூட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 12 முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
