1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Harbours make cyclone warning flags

நெருங்கும் புதிய புயல்; துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு!

Tamilnadu
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சற்று கூடிய தங்கத்தின் விலை - விவரம் உள்ளே!!