1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (18:29 IST)

நக்கலா...... செய்தியாளர்களிடம் எகிறிய எச்.ராஜா

தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சி அமைக்கும் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எச்.ராஜா கோபமாக நக்கலா என கேட்டுள்ளார்.

 
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றது. குஜராத் மாநிலத்தில் 6வது முறையாக தொடர்ந்து வெற்றிப்பெற்றுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
 
இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து தேசிய தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சி அமைக்கும் என கேள்வி கேட்கப்பட்டது.
 
அதற்கு கோபமடைந்த ராஜா நக்கலா? நக்கலான்னு கேட்டேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார். இந்த கேள்விக்கு ஏன் ராஜா ஆவேசத்துடன் பேசினார் என்பது தெரியவில்லை.