தொடர்புடைய செய்திகள்
- விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2 ஆர்பிட்டர்
- தேசிய விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள்… ரசிகர்கள் அதிருப்தி!
- '' ஆர்.ஆர்.ஆர் ''படத்திற்கு 4 தேசிய விருதுகள் - படக்குழு மகிழ்ச்சி
- தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவரை பார்க்க வேண்டும்: நீதிபதி குறித்து ஆர்.எஸ்.பாரதி சூசகம்..!
- இன்று மாலை தேசிய விருதுகள் அறிவிப்பு… தமிழில் எதிர்பார்க்கப்படும் படங்கள்!
ஆங்கிலேயர்களால் சாதி, மதம் என பிரிக்கப்பட்டது: கவர்னர் ஆர்.என்.ரவி
ஆங்கிலேயர்களால் தான் ஜாதி மதம் பிரிக்கப்பட்டது என தமிழக கவர்னர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
நொய்யல் பெருவிழாவில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது. அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகு நாம் தனித்து விடப்பட்டோம் என்றும் ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகு இந்தியர்கள் ஜாதி மதம் என பிரிக்கப்பட்டோம் என்றும் தெரிவித்தார்.
அந்நியர்கள் தான் ஆரியன் திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள் என்றும் தண்ணீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரத்தின் உயிர் தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் தான் வந்தனர் என்றும் அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran
