தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை -ஆர்.என்.ரவி
- மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு: இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி
- டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை.. ஆளுநர் நிறுத்திவைப்பு..!
- மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு..!
- ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்.. முழு விபரங்கள்..!
டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபு.. கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுனர் ரவி..!
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் கோப்புகளை தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்புகள் தயார் செய்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார் என்று தகவல் நேற்று வெளியானது
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுனர் ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது
இந்த பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றும் ஆனால் சைலேந்திரபாபு 61 வயது ஆகிவிட்டது என்றும் எனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை இந்த நியமனத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் ஆளுனர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
