தொடர்புடைய செய்திகள்
- கண்டுகொள்ளாத தலைமை; காவல்நிலையம் சென்ற பாஜக பெண்! – கட்சியை விட்டு நீக்கம்!
- தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் அறிவிப்பு!
- வண்ணாரப்பேட்டை to திருவொற்றியூர் – இரண்டு வாரங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
- வலுவடைந்தது புயல் சின்னம்! இலங்கை நோக்கி நகரும்! – வானிலை ஆய்வு மையம்!
- மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிப்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று ஏற்றத்தை கண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 36,256-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ. 4,532-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
