தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சித் தேர்தல் - ஆலோசனை கூட்டத்தை கூட்டும் அதிமுக!
- அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்
- ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைப்பா? ஈபிஎஸ் விளக்கம்!
- ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை விடுறாங்க! – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!
- சுதந்திர தினத்தில் பிளாஸ்டிக் கொடிகளுக்கு தடை! – மத்திய அரசு அறிவுறுத்தல்!
மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுக என்ன சாதித்தது? காயத்ரி ரகுராம் கேள்வி!
மத்திய அரசின் உதவி இல்லாமல் இந்த 90 நாட்களில் திமுக சாதித்தது என்ன என்று நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுக தனியாக 90 நாட்களில் என்ன சாதித்தது சொல்லுங்கள்? ஆனால் விரல்களைச் சுட்டிக்காட்டுவதிலும் மற்றவர்களைக் குறை கூறுவதிலும் மிகச் சிறந்தவர் திமுக. முந்தைய திமுக ஆட்சியில் மோசமான ஊழல் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
திமுக அரசால் 3 மாதங்களில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல மாற்றம் நம்மால் பார்க்க முடியவில்லை. எல்லாம் பாதி பாதி அல்லது மக்களின் இலவசங்களில் ஊழல் அல்லது மத்திய அரசின் திட்டங்களில் திமுக ஸ்டிக்கர். இன்னும் நம அதிக கடன்களுக்கு செல்கிறோம். ஒரு அறிக்கையும் முழுமையாக நிரப்பப்படவில்லை.
நான் இந்த கடனை தள்ளுபடி செய்வேன் நான் அந்த கடனை தள்ளுபடி செய்வேன், பெண்களுக்கு ₹ 1000 தருகிறேன், இலவச பஸ் தருகிறேன் .. Dialogues நன்றாக தான் இருந்தது ஆனால் 3 மாதங்களில் திமுகவின் போலியான வாக்குறுதி அனைவருக்கும் தெரிய வந்தது. மக்களே தயவுசெய்து விடியலில் இருந்து எழுந்திருங்கள்.
அடுத்த கட்டுரையில்
