தொடர்புடைய செய்திகள்
- மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் கேசரி நாத் திரிபாதி காலமானார்!
- ''#தமிழ்நாடு வாழ்க '' - நடிகர் கமல்ஹாசன் டிவீட்...இந்திய அளவில் டிரெண்டிங்!
- தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுனர் கூறியது ஏன்: தமிழிசை விளக்கம்
- ‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என்ற ஆளுனரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு விமர்சனம்!
- ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஆளுனர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடக்கம்: ஆளுனருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுமா?
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளதை அடுத்து ஒரு சில கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக திமுக உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூற வேண்டும் என ஆளுநர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்க உள்ளது. ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரைக்கு பின் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆளுநர் உரையில் அரசின் நலத்திட்டங்கள், மாநிலத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ள முக்கிய திட்டங்கள் ஆகியவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து எம்.எல்..ஏக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
