தொடர்புடைய செய்திகள்
- ஜெபமாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வாக்குசேகரிக்கும் பாஜக! – கோவையில் சுவாரஸ்யம்!
- பொது இடத்தில் போலீஸாரை கேவலமாக பேசிய சி.வி.சண்முகம்! – போலீஸார் வழக்குப்பதிவு!
- ஆய்வுக்கு வந்த அதிகாரி; அதிர்ச்சியில் இறந்த ரேசன் கடை ஊழியர்! – அரியலூரில் அதிர்ச்சி!
- திமுக கவுன்சிலர் வேட்பாளர் திடீர் மரணம்! – தொடரும் மரணத்தால் அதிர்ச்சியில் திமுக!
- யானைக்கு தீ வைத்த நபர்; ஒரு ஆண்டு கழித்து சரண்டர்!
திமுகவுக்கு ஓட்டு கேட்கும் வெளிநாட்டுக்காரர்! – கோவையில் சுவாரஸ்யம்!
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வெளிநாட்டுக்காரர் வாக்கு சேகரித்து வருவது கோவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூருக்கு பணி நிமித்தமாக வந்த ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டெபன் என்பவர் திமுகவுக்கு ஆதரவாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகின்றார். கோவையில் பேருந்து ஒன்றில் பயணித்தபோது பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் கோகுல் என்பவருக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போது அவர் மகளிருக்கு அரசின் இலவச பயணத்திட்டம் பற்றி சொன்னதும் வியந்த ஸ்டெபன், திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
