1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Executives who left DMD and joined AIADMK

தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள்

admk
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  கழக இடைக்கால  பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி  தலைவருமான திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.

கரூர் வடக்கு பகுதி 7 வது வார்டு தேமுதிக இளைஞர் அணி செயலாளர் மகேஷ்வரன், முன்னாள் 7 வது வார்டு செயலாளர் எ.ரவி, கேப்டன் மன்றத்தை சேர்ந்த சண்முகம், சுதர்சன் உள்ளிட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி  கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை  இணைத்துக் கொண்டனர்.
 
உடன் கரூர் வடக்கு  பகுதி கழக செயலாளர் அண்ணமார் தங்கவேல், 07 வது வார்டு செயலாளர் அசோக் குமார்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?