தொடர்புடைய செய்திகள்
- பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்; திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!
- திருநெல்வேலி:தமிழ் மொழியை அகஸ்திய முனிவர் பெற்ற மண் - அண்ணாமலை
- உங்களால் ஐஏஎஸ் தேர்வு எழுதமுடியுமா? ஆளுனரை தேர்தலில் போட்டியிட சொன்ன உதயநிதிக்கு பதிலடி..!
- முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியதில் எந்த தவறுமில்லை- அண்ணாமலை
- சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி- முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாதயாத்திரை முடிந்ததும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
பாதயாத்திரை முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் மு க ஸ்டாலின் நல்லாட்சி கொடுத்து வருகிறார் என்றும் ஆனால் ஆளுநர் அவருக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறார் என்றும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செய்யவில்லை என்றும் பஸ் பயணம் தான் செய்து வருகிறார் என்றும் இந்த பயணம் முடிந்தவுடன் அவர் காணாமல் போய்விடுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக மாநாட்டை புளியோதரை மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டதை 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
Edited by Mahendran
