1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Every father should give up alcohol. Vijayakanth

ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும் - விஜயகாந்த்

Liquor
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுப்பிரியா(16). கூலித்தொழிலாளியான தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்  அந்த சிறுமி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ‘’வேலூர், சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா,தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மதுபாட்டில்கள் மீது சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் விலகல்?