1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS OPS ADMK one man presidential issue

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தூது செல்லும் புறாக்கள்! – சமாதானம் ஏற்படுமா?

ADMK
அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் ஒன்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவம் நிலமையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவருக்கும் பொதுவான கட்சி நபர்கள் இருதரப்பு முக்கிய ஆதரவாளர்களையும் முதற்கட்டமாக இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
12 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!