1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Enforcement officers raid in tamil nadu

3வது நாளாக நீட்டிக்கும் அமலாக்கத்துறை சோதனை..மணல் விற்பனையில் முறைகேடா?

மணல்
தமிழகத்தில் மணல் விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள்  தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். 
 
இரண்டு நாள் சோதனை முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மணல் விற்பனைகள் முறைகேடு சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேலும் தொழிலதிபர் ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ள நான்கு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இன்று இந்த சோதனை முடிவடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழக மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!