1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Emu Chicken Case.. Verdict Released After 13 Years..!

ஈமு கோழி வழக்கு.. 13 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு..!

ஈமு கோழி
ஈமு  கோழி வளர்ப்பது தொடர்பான வழக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் கழித்து தற்போது நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு ஈமு கோழி பண்ணை தொடர்பான விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் 1087 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
 
இதனை அடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள நீதிமன்ற தீர்ப்பில் ஈமு கோழி நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 19 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழக முழுவதும் சுசி ஈமு கோழி நிறுவனத்தின் மீதும் சில மோசடி வழக்குகள் உள்ளன என்பதும் இந்த வழக்குகளின் தீர்ப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகா கும்பமேளா உயிரிழப்பு 30 ஆக உயர்வு! தனிப்படை அமைத்து விசாரணை!