1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy met admk mlas in podichery

2 நாள் வெயிட் பண்ணுங்க!. எல்லாமே நம்மகிட்ட வரும்!.. எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை!...

admk
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. 2026-ல் எப்படியாவது ஆட்சியை புடிக்கவேண்டும் என்கிற நோக்கில் எடப்பாடி பழனிச்சாமி முதல் நபராக தமிழகமெங்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு சென்று அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அதைவிட இந்த முறை கண்டிப்பாக அதிமுகதான் ஆட்சிக்கு வரும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவோ வேறு மாதிரி இருந்தது. தவெக முதலிடத்திற்கு வர அதிமுக மூன்றாம் இடத்திற்கு போனது. எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலையில் தற்போது அதிமுக இருக்கிறது..

அதேநேரம் 108 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாத நிலையில் தவெக இருக்கிறது. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்தும் இன்னும் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ஒருபகக்ம், அதிமுக தங்களின் எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு அவர்களை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்களிடம் ‘2 நாட்கள் காத்திருங்கள்.. தமிழக அரசியல் சூழல் அதிமுகவை நோக்கி விரைவில் வரும்.. நாங்கள் கூறும் வரை யாரும் இங்கிருந்து சேர்ந்து கிளம்ப வேண்டாம்’ என கூறினாராம். அதோடு கட்சி முடிவை மீற மாட்டோம் என அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
இந்தியா மீது டிரம்ப் விதித்த 10% வரி செல்லாது: நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!