வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (16:51 IST)

இ - பாஸ் ரத்து செய்யப்படாது: ஈபிஎஸ் திட்டவட்டம்!!

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா பாதிப்பு குறைந்தபின் பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இப்போதைய நேரத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.