தொடர்புடைய செய்திகள்
- 37 கண்டெய்னர்களில் அம்மோனியம் நைட்ரேட்; இடம் மாற்ற திட்டம்! – பாதுகாப்பு தீவிரம்!
- திமுக கோட்டையில் குத்து வெட்டு; நல்ல தொடக்கம்! – எச்.ராஜா ட்வீட்!
- பதவி ஆசையில் திமுகவில் சேர்ந்தவன் இல்லை நான்! – துரைமுருகன் தடாலடி விளக்கம்!
- தெரு முழுக்க மண்டை ஓடுகள்; எந்த ஜண்டா பாத்த வேலையோ!? – பீதியில் மக்கள்!
- நைட் ஷிஃப்ட் முடிந்து வந்த மகன்; கள்ளகாதலுடன் தாய்! – குமரியில் கொடூர சம்பவம்!
வருகிறது அதீத கனமழை; தமிழகத்தில் ரெட் அலர்ட்! – வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள சூழலில் தமிழக மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உண்டான மழையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலூரில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
