தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தொடங்கியது தகரம் அடிக்கும் பணி! – கோவை முக்கிய வீதி மூடல்!
- 5 நாடுகளில் பரவிய இந்தியாவின் இரட்டை உருமாற்ற கொரோனா! – அதிர்ச்சி தகவல்!
- தேசிய கொரோனா தடுப்பூசி திருவிழா! – பிரதமர் சொன்ன 4 வலியுறுத்தல்கள்!
- கொரோனா தொற்றை அலர்ட் செய்யும் நவீன கருவி! – பீகார் மாணவர்கள் சாதனை!
- சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏவாக நுழைந்திருக்க வேண்டியவர்: முக ஸ்டாலின் இரங்கல்
அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி: மகனுக்கும் கொரோனா உறுதி!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
மேலும் கொரோனா காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட துரைமுருகன், அப்பல்லோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் துரைமுருகன் மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்த் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரே நேரத்தில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
