வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (11:46 IST)

கொரோனா தொற்றை அலர்ட் செய்யும் நவீன கருவி! – பீகார் மாணவர்கள் சாதனை!

கொரோனா தொற்றை அலர்ட் செய்யும் நவீன கருவி! – பீகார் மாணவர்கள் சாதனை!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வந்தால் எச்சரிக்கும் கருவியை பீகார் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துதல், பகுதி நேர ஊரடங்கு என அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி ஒன்றை பீகாரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் வெப்பநிலையை கொண்டு கொரோனா பாதிப்புகளை கண்டறியும் இந்த நவீன கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.