விஜய்க்கு ஓட்டு போடுன்னு சொல்லி அடிச்சாங்க!.. திமுக கட்சியினரை வைத்து நாடகமா?..
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களிடம் ஆய்வு எடுக்க சென்ற தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 5 பேரை ரவுடிகள் கடுமையாக தாக்கியதாக தவெக புகார் சொன்னது. அதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது துறைமுகம் தொகுதியின் எம்.எல்.ஏ நிறைய ரவுடிகளை அனுப்பி மக்களிடம் ஆய்வுகளுக்கு சென்ற தவெக நிர்வாகிகளை தாக்க சொல்லியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் அந்த தொகுதியில் ஆய்வுக்கு செல்லும் தவெகவினரை போன் செய்து மிரட்டுகிறார். அவர் ரவுடி போல நடந்து கொள்கிறார் என்று பேட்டி கொடுத்தார்கள்..
தவெக தலைவர் விஜயும் ரவுடிகள் தவெகவினரை தாக்கிய வீடியோவை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து திமுகவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் செய்தியாளர்களிடம் இதை மறுத்த அமைச்சர் சேகர்பாபு பொதுமக்களுக்கும் அந்த கட்சியினருக்கும் இடையேதான் சண்டை.. அந்த கட்சியினர் தாக்கியதில் பொதுமக்கள் சிலர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களிடமும் போய் பேட்டி எடுங்கள் எனக் கூறியிருந்தார்...
அவர் சொன்னது போலவே இரண்டு பெண்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார்கள்.. அதில் தவெகவுக்குதான் ஓட்டு போட வேண்டும் என சொல்லி வீட்டுக்குள் புகுந்து தவெக கட்சிக்காரர்கள் எங்களை அடித்தார்கள்.. விஜய்க்குதான் ஓட்டு போட வேண்டும்.. வேற யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என்று எங்களை மிரட்டினார்கள் என்று சொன்னார்கள். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவ திமுகவினர் தவெகவை விமர்சித்தார்கள்..
ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த இரு பெண்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்களை தவெகவினர் கண்டுபிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அதாவது திமுக நபர்களையே பொதுமக்கள் போல சித்தரித்து அவர்களை தவெக நிர்வாகிகள் தாக்கியது போல பொய் சொல்ல வைத்து புகார் சொல்ல வைத்திருக்கிறார்கள் என தவெகவினர் தங்களின் சமூகவலை பக்கங்களில் பதிவிட்டார்கள்.
இதையடுத்து சிறப்பாக நடித்த அந்த இரண்டு பெண்களுக்கும் ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..