தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வு தேதி ஒத்திவைப்பு
- மாவட்ட அளவில் பேசி முடிவு பண்ணிக்கலாம்..! – திமுக, காங்கிரஸ் கூட்டணி!
- கூட்டணி எப்படி? எத்தனை சீட்டுகள்? – உள்ளாட்சி தேர்தல்; அதிமுக, பாஜக ஆலோசனை!
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுத்தாக்கல் இன்று ஆரம்பம்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- நாளை அதிமுகவினர் ஆலோசனை
தேர்தல் அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம்: விஜயகாந்த் கண்டனம்!
தேர்தல் அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம் இருந்தால் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
எவ்வித கால அவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதில் இருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தமாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
