1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (09:29 IST)

கூட்டணி எப்படி? எத்தனை சீட்டுகள்? – உள்ளாட்சி தேர்தல்; அதிமுக, பாஜக ஆலோசனை!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக, பாஜக கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளன.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக, பாஜக கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை மேற்கொள்கின்றன. இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தல் முதலாகவே கூட்டணியில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியை தொடர்வது குறித்தும், போட்டியிடும் இடங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அதற்குபின் இரு கட்சி தலைமைகளும் சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.