வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:15 IST)

தேமுதிக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டு! அதிர்ச்சி முடிவு!

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் வெற்று தோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9 வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்திலேயே , மொத்தம் 5 வாக்குகள் இருந்தாலும் அந்த வாக்குகள் வேறு வார்டில் இருந்ததால் அவர்களால் கூட கார்த்திக்குக்கு வாக்களிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 2 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளது.