தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!
- தகிக்கும் வெயிலில் பீரைத் தேடி ஓடும் மதுப்பிரியர்கள்! – எக்கச்சக்கமாய் எகிறியது பீர் விற்பனை!
- நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..!
- தமிழ்நாட்டில் அறிமுகமாகும் கோதுமை பீர்: விலை என்ன தெரியுமா?
- செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
டாஸ்மார்க் கடையில் வாங்கிய மது பாட்டிலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் ஒரு வாடிக்கையாளர் 150-ரூபாய் கொடுத்து ஒரு பிராந்தி பாட்டில் வாங்கினார்.
மது பாட்டிலை வாங்கி உள்ளே பார்த்தபோது அதில் பூச்சிகள் உள்ளே மிதந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த மது பிரியர் சேல்ஸ்மேனிடம் சென்று காண்பித்தார்.
சேல்ஸ்மேன் அந்த மது பாட்டலை பெற்றுக்கொண்டு வேறு மது பாட்டிலை மாற்றிக் கொடுத்தார். மேலும் அந்த குடிமகன் இதை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது அப்படியே வைத்திருந்து கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார்.இச்சம்பவத்தால் அப்பகுதி மதுபான பிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
