தொடர்புடைய செய்திகள்
- கோத்ரா கலவர வழக்கு; சாட்சியங்கள் இல்லை! – குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை!
- சம்மதமின்றி தொட்டாலே பாலியல் குற்றமா? – சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்!
- 11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
- சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: 2 பேர் பலி
- பாலியல் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: அமைச்சர் உஷா தாக்கூர்
குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக புகார்: உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை..!
குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக புகார்: உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை..!
குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை புடுங்கியதாக புகார் வந்துள்ளதை அடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே குற்றவாளிகளின் கை கால்கள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது தெரிந்ததே. குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட மறுநாளே கைகளில் கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களைப் புடுங்கியதாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
Edited by Siva
