1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court summons DMK MP, A Rasa

திமுக எம்பி., ஆ ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்!

dmk
திமுக எம்பியும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடபு துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்துக் குவித்துள்ளதாக  கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது சிபியை.

இந்த சொத்து குவிப்பு வழக்கில், எம்பி ஆ.ராசாவுக்கு இன்று சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் சம்மன் அனுபியுள்ளது.

அதில்,  ஆ.ராசா உள்ளிட்ட 3 பேர்  ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி !