1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court order about arumugasamy commission statement

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு..

ஜெயலலிதா
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்து இருந்தார்.
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பி.ஏ.ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு
 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக பி.ஏ.ஜோசப் தனது மனுவில் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விரதம் இருந்தும் திருமணம் ஆகவில்லை.. கோபத்தில் சிவலிங்கம் சிலையை திருடிய வாலிபர் கைது..!