1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona spread in Pondy increases

அதீத வேகத்தில் கொரோனா பரவல்: புதுச்சேரியில் பீதி!

புதுச்சேரி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,528 ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
புதுச்சேரியில் இதுவரை 1,47,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு 1,458 பேர் குணமடைந்துள்ள நிலையில் 14,122 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பள்ளிகளுக்கு மானியத்தொகை விடுவிக்க உத்தரவு!