1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona cases in Pondy increases

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் உச்சம்!

புதுச்சேரி
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் உச்சமெடுத்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 1,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,559 ஆக அதிகரித்திருக்கிறது.
 
புதுச்சேரியில் இதுவரை 1,29,319 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
About Writer
Sugapriya Prakash