1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஜூலை 2021 (07:58 IST)

கொரோனா அதிகரிப்பால் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா? முதல்வர் இன்று ஆலோசனை!

கடந்த பல வாரங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று திடீரென சற்று உயர்ந்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இன்று கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவிக்க முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இன்று மாலை அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது கடந்த இரண்டு நாட்களாக 1800 க்கும் குறைவான பாதிப்பில் இருந்த நிலையில் நேற்று திடீரென 1800க்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் கொரோனா குறைந்த பகுதியில் கூடுதல் தளர்வுகளையும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது