தொடர்புடைய செய்திகள்
- சென்னை-நெல்லை மட்டுமல்ல, இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில் துவக்கம்..!
- கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
- கண்டிப்பா பாஜகவுடன் கூட்டணி இல்ல; நாளை கூட்டத்தில் முக்கிய முடிவு! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
- அண்ணாமலையை மாற்ற முடியாது.. அதிமுகவிடம் உறுதியாக தெரிவித்த பாஜக தலைமை..!
- மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை என்பது எனது ஐடியா: கமல்ஹாசன்
பாஜக போடு தோப்புக்கரணம்னு சொன்னா, போடுபவர்கள் தான் அதிமுகவினர்: முதல்வர் ஸ்டாலின்
போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னா.. இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுக தோப்புக்கரணம் போடுவாங்க என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார்
மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது. நீங்க தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பாங்க என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்முடைய இளைஞர்களை எல்லாம் பக்கோடா விற்க செல்லுங்கள் என்று கூறியவர் தான் பிரதமர் மோடி என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
