1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (07:11 IST)

வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து மழையின் சேதம் குறித்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஏழு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் இந்த வாரத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மழை மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்
 
இந்த ஆலோசனையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது