1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Circuit breaker blast in marriage hall

திருமண மண்டபத்தில் வெடித்த மின்சாரப் பெட்டி… மணமகளுக்கு மயக்கம்; தந்தைக்கு நெஞ்சுவலி!

கொரோனா
சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மின்கசிவு காரணமாக மின்சாரப்பெட்டி வெடித்து சிதறியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் உள்ள சர்மா நகரில் தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்க்யூட் பிரேக்கர் வெடித்துள்ளது. இதனால் மின் இணைப்பு தடை பட்டுள்ளது.
இரண்டு மணிநேரம் ஆகியும் சரிசெய்யபப்ட்டு மின்சாரம் வழங்கப்படாததால், திருமண வீட்டார் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பதற்றத்தில் மணமகளின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்த மணமகள் மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போராட்டம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் வந்து அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
அனபெல் சேதுபதி - விமர்சனம்