தொடர்புடைய செய்திகள்
- விருதுநகர் தொகுதி வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பதில் கோரி இருப்பதை வரவேற்கிறேன் - விஜயபிரபாகரன்!
- ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருக்கும் தங்கம்.. வெள்ளி விலையில் சிறிய மாற்றம்..!
- சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!
- வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற சரக்கு ரயில் எஞ்சின்! என்ன காரணம்?
- அட்ரஸ் இல்லாமல் ரயிலில் வந்த 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை-மன்னார்குடி இடையே புதிய வந்தே பாரத் ரயில்... பயணிகள் மகிழ்ச்சி..!
சென்னை - மன்னார்குடி இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் மன்னார்குடி பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது என்பதும் சமீபத்தில் கூட தமிழகத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தொடங்கின என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி, தஞ்சாவூருக்கு குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .
டெல்டா பகுதியில் வேளாங்கண்ணி, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய முக்கிய நகரங்கள் இருக்கும் நிலையில் சென்னை - மன்னார்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கினால் பயணிகள் பலன் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின் இந்த ரயில் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், மைசூர், விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
